×

பூஜை அறையில் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் முன்னாள் பாஜ மாநில செயலாளர் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் புகார்

சென்னை: வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பாஜவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் என்பவர் முன்னாள் பாஜ மாநில செயலாளர் கே.டி.ராகவன் பூஜை அறையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். பூஜை அறையில் அவ்வாறு ஆபாசமாக நடந்து கொண்டது உண்மை என்றால் கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பொய்யான வீடியோ என்றால் அதை பொது வெளியில் வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும். இந்த வீடியோ இந்து உணர்வாளர்களை பெரிதும் பாதித்துள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் வணங்கும் பூஜை அறையில் தவறாக நடந்து கொண்ட கே.டி.ராகவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் எனவே கே.டி.ராகவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : BJP ,Raghavan ,Piyush Manush , Former BJP state secretary Raghavan should be prosecuted for obscene conduct in prayer room: Social activist Piyush Manush complains at police commissioner's office
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!